கவி நான்கு

இனிய    ரமலான்    வாழ்த்துகள்
25-04-2020

அதிகாலையிலே   அல்லாஹ்ன்     அனுமதியோடு

சொல்லால்     வசைபாடும்    நாவில்

எல்லா   உணவையும்   தூர  விலக்கி

ஒரு   நேர   உணவில்  பொய்   மறந்து    மெய்யோடு

தொழுகையின்   தூரம்  அறிந்து

தூயவனாம்    இறையருள்   வேண்டி

அண்ணல் நபியாம்    துதி   பாடி   

அனைத்துத் துன்பம்   தனை மறந்து

பிறை   கண்டு   பிணி  போக்கி

மாலை  வரை   நோன்பிருந்து  மகத்துவம்    புரியும்   மாந்தனே

ரமலான்   நோன்பு   பலன்   நமை   சேர

இயன்றதை   செய்வோம்      எளியவற்கு   இணங்க

எளியவரை   வலியவராக்குவோம்   

இத்திருநாள்  ரமலான்  மாதத்தில்

நல்லதொரு   நோன்பில்     சொர்க்க  வாசல்     கண்டிடுவாய்

அல்லாஹ்வின்     அருளோடு   தமிழ்    உள்  இன்ப   உணர்வோடு


அனைத்து   சகோதரர்களுக்கும்   இனிய  ரமலான்   வாழ்த்துகள்

கவி கண்ணன்



                 பெற்றோர்கள்    தின   வாழ்த்த         01-06-2020

 

வண்ண   மலராய்   பெத்தெடுத்து

 

எண்ணமெல்லாம்     எழிலடைய  செய்த  பெத்தவங்களே

 

வாரி   அணைத்து   வாஞ்சையுடன்  

 

வழி  நடத்திய  வாழும்   தெய்வம்   தகப்பனாரே

 

தாய்மொழியை   தமக்குறைத்த   தாயுமானவளே

 

   எரும்பு    கடிக்காம   ராத்தூக்கம்   தொலைச்சவங்களே

 

அறிவை    அள்ளி  தெளிச்ச     அன்பான  அப்பாவே

 

மிடுக்காக   உடை   உடுத்த   மீளா    கஷ்டம்   பட்டவங்க

 

 நான்  ஆளாகி  வருவேனுன்னு  ஆசைப்பட்டு   வளர்த்தவங்க

 

பெத்து   பேரு  வச்ச   பெரும்   பாக்கியம்  ஆனவங்க

 

முத்தாய்    நான்  வளர   பல   முன்னெடுப்பை      கண்டவங்க

 

ஓயாத   உழைப்பாலே   ஓய்ந்து    போனவங்களே

 

நோகாம     பாத்துக்கிற  பெத்த  பிள்ளை    நான்  இருக்கேன்

 

நோய்  நொடி   வந்தாலும்   தளராம   தாங்கிக்  கொள்ள  நான்  இருக்கேன்

 

பொத்தி  வச்ச   ஆசைகளை   மொத்தமாக   சொல்லுங்களே

 

அத்தனையும்   செய்து   முடிச்சாலும்   நீங்க   பெத்த   கடன்  தீராதைய்யா

 

என்னை   சுமந்த   தாயே     உன்னை   சுமக்க   வரம்   ஒன்று   தாயே

 

அனைத்து  பெத்தவங்களுக்கும்     இது   சமர்ப்பணம்  🙏🏻🙏🏻🙏🏻

கவி  கண்ணன் 

Comments