கவி மூன்று

செவிலியர் தினம் - 12-05-2020

தாயின்   வயிறு   பிரிந்த   பின்னே 

நாம்   தவழ்வது   செவிலியர்  கைகளில் முன்னே

 வெள்ளாடையில்  நம்   வேதனைகளைத் துடைக்கும்  பெண்ணே

எந்நோய்   என்றாலும்     எதிர்த்து  நிற்கும்  சிங்கப்பெண்ணே

  உறவுகளே   தள்ளி  நிற்கும்   நேரத்தில்

உரிமையுடன்  பணிகளைத் தொடங்கும்  வெள்ளைத் தேவதையே

அச்சம்   தவிர்த்து   ரத்தம்   கூட   துடைத்து

  உயிர்   துச்சமென   வாழும்     பிரம்மனின்   மறு   பிறவிகளே

ஆகாய   வானிலே   எங்களை    ஆசீர்வதிக்க  வந்த  வெள்ளை  நிற  தேவதைகளே


ஆறெழு   ஜென்மமும்  ஆறாது   உங்கள்   பணி   சிறக்க  வாழ்த்துக்கள்💐💐💐💐

கவி  கண்ணன்

தாசி

அழகு    நிறைந்த   கலை    ஓவியம்   நீ

கவிஞன்   வடிக்கும்    சிலைக்    காவியம்  நீ

ஆண்மை    விளைந்த வீரனை  வீழ்த்தி   சிரிப்பவள்  நீ

விவரம்    அறியா   வேந்தனையும்    உலகை   அறியச் செய்பவள்   நீ


சில்லரை   விழும்  முன்னே    சிரிப்பலையை   விழச்செய்பவள்   நீ


ஆண்டி   ஆனாலும்   அரசன்   ஆனாலும்   அரவணைத்து  போபவள்   நீ


நாடு    நகரை   கடந்த   நளபாதினி   நீ

நயாக்கரா   நீர்வீழ்ச்சியின்  சுழல்   ஆட்சி   நீ

நாலு   சுவரே    உலகம்   என்பவள்   நீ

நாலு  காசே   விடீயல்   என்பவள்   நீ

நாடு   நலம்   பெற    நம்பினோர்   சுகம்  பெற


தன்னை   உருக்கி   பெண்மை வாழச்செய்பவள்   நீ


விலை   மதிக்க   முடியா   விலை   மகள்   நீ


விவரம்    அறியச்செய்யும்     அலை   மகள்   நீ

இல்லறப்பெண்   இனிமையுடன்  வாழ

உன்   இளமை   தொலைப்பவள்  நீ

அழகு     இருக்கும்   வரை      என்    அரசாங்கம்   என்பவள்   நீ


அழகு    முடிந்த   பின்னே  வறுமையில்    வாடுபவள்  நீ

கரை  புரண்டோடும்     காமத்தை     கட்டுடல்  கொண்டு   தடுப்பவள்  நீ

தர்ம   பத்தினி   தழைத்தோங்க   தன்னையே    அழிப்பவள்   நீ

அன்பை   காட்டி   ஆசை   தீர்க்கும    உலக   அழகியே

உன்   ஆன்மா   ஆணினத்தை   ஆசிர்வதிக்கட்டும்


கவி  கண்ணன்

Comments