கவி - தொடர் இரண்டு

அன்னையர்   தின    வாழ்த்துகள்.   
10/05/2020

தன்னுயிர்    கொடுத்து  இன்னுயிர்   காப்பவளே

பொன்   பொருள்    இல்லையென்றாலும்  

பொக்கிசமமாய்     தன்    பிள்ளையை   பார்ப்பவளே

தனக்கு    உணவில்லாத   போதும்     எமக்கு   உணவளிப்பவளே

பிள்ளை    முகம்    கண்டே    கொள்ளை   காரணம்   கேட்பவளே

அழுகுரல்    கேட்டதும்    அடிவயிறு     பதறி   வருபவளே

அப்பனின்    ஏச்சுக்கும்   பேச்சுக்கும்   ஏளனமாய்   போனவளே

பசி   பொருக்காத    பிள்ளைக்கு   உன்   கையால்   கொடுக்கும்

பச்சத்தண்ணீரும்    ருசி    மாறி    பசியாத்தும்   பானம்    அல்லவா

தன்   வயிற்றில்   சுமந்து    வாழ்வு   கொடுத்த   சுமைதாங்கியே

உமது    சுமையை    இறக்க    நான்    பிறந்தேன்    வரம்   வாங்கியே

சுரந்த   பால்   உன்   ரத்தமன்றோ   

சுவை   கூடி   இனித்ததம்மா  அந்நாளில்

இன்று    சுவையூட்டும்   உன்   பேச்சு     சிலிர்க்குதம்மா   இந்நாளில்

பத்து   மாசம்   வைத்திருந்து பெற்றவளே   என்  தெய்வம்

எமை    பெற்றபோது    நீ   எடுத்ததென்னவோ   மறு  ஜென்மம்

மறு ஜென்மம்  என்று ஒன்று   இருக்குமேயானால்  

மீண்டும்   உன்   மடிதனில்   தவழ்ந்திட  வேண்டுமம்மா

இப்பிறவியில்   தராத     நல் வாழ்வை

அப்பிறவியில்   உனக்குத் தர  வேண்டுமம்மா


கவி  கண்ணன்



என் தாயே காமாட்சி

பாசம்   காட்டி  வளர்த்தவளே     என்   தாயே   காமாட்சியம்மா

நற்கனிவுடனே   வளர்த்துவிட்டாய்   எனை   ஆளாக்கிய அம்மா

பார்   போற்ற   நானிருந்தும்    உனை   ஊர்    போற்ற   காத்திடலை   நானம்மா

கஞ்சோ    கூலோ  கரைத்து  குடுப்பாய்    தேவாமிர்தம்

என்   கானா   பசியும்   கரைந்து   போகுமே   அந்நேரம்

 உன்   பாதம்   தொட்டு   பணிய வேண்டும்   எந்நேரமும்

என்  பாவங்களை    கழுவ  வேண்டும்   உன்  பாதங்களில்   அது   பொன்னேரமாகிடும்

 எனைக்  கருவரை   சுமந்த   தாயே  தனயனாகினேன்  இப்பிறவியில்

 நான்  பட்ட  கடனை     நான்   என்று  தீர்ப்பேன்  எப்பிறவியில்

தூரத்தில்  நான்   இருந்தும்   துணைவருது     உன்   நினைவு

தூயவளே   என்  தாயே   துணை  நில்லு   வழிச்  செல்ல

கவி  கண்ணன்

Comments